பகலிலேயே கூட்டம் கூட்டமாக வருகின்றன : இப்பகுதியில் யானைகள் ஏராளமாக உள்ளன. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதாலும், வனப்பகுதியில் உள்ள குட்டைகள் யாவும் வற்றிய நிலையில் உள்ளதாலும் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் வரட்டு பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்தும், கோடை வெப்பம் தனித்தும் பின்னர் வனப்பகுதிக்குள் செல்கின்றன. வனப்பகுதியில் வரட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அணையில் உள்ள தண்ணீரில் கூடி கும்மாளம் அடித்தவாறு சென்ற யானைகள் கூட்டமாக சென்ற காட்சி காண்போரை வியக்க வைத்தது. தற்போது வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நீர் நிறைந்திருப்பதால் யானைகள் அதிகளவில் பகலிலேயே கூட்டம் கூட்டமாக வருகின்றன. எனவே வரட்டு பலம் அணைப்பகுதி பர்கூர் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். Related Link ஸ்கூட்டி மீது கனரக வாகனம் ஏறி இறங்கி விபத்து