Also Watch
Read this
Posted on: Feb 13, 2026 01:53 PM
By: Manigandan Raja

கொ*ல குற்றவாளி ஓட்டம் :
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விளாங்குளத்தைச் சேர்ந்தவர் புலிப்பாண்டி (25). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது
செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், நீதி மன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார் இதையடுத்து, புலிப்பாண்டிக்கு சிவகங்கை நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்தது. அவரை நேற்று சிவகங்கை தாலுகா போலீஸார் கைது செய்து மருத்துவப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் நின்று கொண்டு இருந்த அவர் பின்புற வழியாக தப்பித்து ஓடியுள்ளார் அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி காவல்துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved