திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குழுவினர் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோயில் குவிந்த பக்தர்கள்அறுபடை வீடுகளில் இரண்டாம் அடை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது .இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாசித் திருவிழா இரண்டாவது நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாசித் திருவிழா இரண்டாவது நாள் என்பதால் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சண்முக விலாச மண்டபம், கோயில் வளாகத்தில் திருமணங்கள் நடைபெற்றது.