Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நாகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவரது தோட்டத்தில் சோதனையிட்ட போலீசார் பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே வளர்ந்து நின்ற கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர்.