news-tamil-logo

3/16/2026, 9:47:05 PM

news-tamil-logo
more
Home districtnews மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருந்து...
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருந்து...

ராணிப்பேட்டை

Posted on: Feb 19, 2026 08:24 AM

17

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rani main(1)

வாலாஜாபேட்டை நவாப் ஜாமியா மஸ்ஜித் பெரிய மசூதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் முதல் நாள் நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபட்டனர்.

மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருந்து...

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழை எளிய மக்களுக்கு அதிகளவில் தானம், தர்மம் செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷஅபான் மாதத்தின் 29-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும்.


நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபட்ட இஸ்லாமியர்கள்

அவ்வாறு பிறை தென்படாத சூழலில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாள் நோன்பு தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் நான் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த நவாப் ஜாமியா மஸ்ஜித் பெரிய மசூதியில் அதிகாலை 5 மணி அளவில் வாலாஜா மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஏராளமானோர் மசூதிக்கு வருகை தந்து இறைத் தொழுகையில் ஈடுபட்டு முதல் நாள் நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
5 hrs 24 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved