சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாகூரில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள். இதனால் நாகூர் முழுவதும் 10 கிலோ விறகு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறதது. நாகை மாவட்டத்தில் நிலவும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நாகூர் அலங்கார வாசல் பகுதியில் செயல்படும் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டிற்கு மாறியுள்ளன.10 கிலோ விறகு ரூ.150சமையல் எரிவாயு கிடைக்காத நெருக்கடியான சூழலில், 10 கிலோ விறகு 150 ரூபாய் என்ற விலையில் சுமார் 6,000 ரூபாய்க்கு விறகுகளை வாங்கி உரிமையாளர்கள் சமைத்து வருகின்றனர். விறகு அடுப்பில் உணவுகளைத் தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுப்பதாலும், கடும் புகை மூட்டத்தாலும் தாங்கள் பெரும் சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று முதல் விறகு அடுப்பு மூலம் சமையல்இருப்பினும், பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில், தினமும் தங்கள் கடையை நம்பி உணவு அருந்த வரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, இன்று முதல் விறகு அடுப்பு மூலம் சமையல் பணிகளைத் தொடங்கி அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். Related Link கரப்பான் பூச்சி போல் காரை கவிழ்த்த மதுபோதை ஆசாமி