Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டுகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நெல்லை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இதேபோல், வள்ளியூர், ராதாபுரம், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வள்ளியூர் கீழரத வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பணி முடிந்து வீடு திரும்பிய பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.