கோத்தகிரி நகர் பகுதியில் அமைந்துள்ள கோர் ஹவுஸ் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் வெளியாகி குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தைகோத்தகிரி நகர் பகுதியில் அமைந்துள்ள கோர் ஹவுஸ் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிக குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வந்த காட்சிகள், குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி உள்ளது.சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள்குறிப்பாக கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதாலும், அதிக குடியிருப்பு நிறைந்த பகுதி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதி என்பதாலும் அதிக மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்லக்கூடிய நிலையில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி கேமரா பதிவு பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைஎனவே பொதுமக்கள் நலன் கருதி கோர் ஹவுஸ் பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு மேற்க் கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Related Link சிலிண்டருக்கு மாலை போட்டு அஞ்சலி