Also Watch
Read this
By: Fyrose Banu

ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் வணிகர் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. 

சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கும், விலை ஏற்றத்திற்கும் காரணமான மத்திய அரசை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலையிலேயே விறகு அடுப்பு வைத்து சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டனகோஷங்களை எழுப்பினர்.