Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற கூட்ட மேடையில் திமுகவை சேர்ந்த துணைத் தலைவர் பாலமுருகனின் இருக்கை அகற்றப்பட்டதாக தெரிகிறது.
நகராட்சி ஆணையரை மிரட்டும் தொனியில் பேசியதால் இருக்கை அகற்றப்பட்டதாக நகர்மன்ற தலைவர் செல்வராஜ் விளக்கமளித்தார். இதை ஏற்க மறுத்த துணைத் தலைவர் நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.