Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 01:34 PM
By: Manigandan Raja

தொகுதி ஒதுக்கீடு இழுபறி :
தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் நேரடியாக சந்தித்து பேசி முடிவெடுப்பது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்த பிறகுதான் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பதை சொல்ல முடியும் என்று கூறினார். மேலும், கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தீர்வு காண கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அதனை தாங்கள் இழுபறியாக நினைக்கவில்லை என்றும் சண்முகம் விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved