Also Watch
Read this
By: Manigandan Raja

நேற்று மேலும் ஒரு பெண் உயிரிழந்ததாக மாநில அரசு தகவல் :
கேரளத்தில் நேற்று ஷிகெல்லோசிஸ் (shigellosis) பாக்டீரியா தொற்று பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் மட்டும் மொத்தமாக 6 பேர் ஷிகெல்லோசிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கோழிக்கோடு,திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து :
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள Nagasandra மெட்ரோ ரயில் நிலையத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். மெட்ரோ ரயில் நிலையத்தின் அவசரகால வழியில் உள்ள பெயர்பலகையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதே சமயம் மெட்ரோ ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை.