Also Watch
Read this
By: Web Team

டெல்லி ஜங்புரா பகுதியில் நான்கு தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வரும் மதராஸி கேம்ப் குடிசைகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. அங்கு வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மேலும் 45 கிலோமீட்டர் தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம்பெயர்ந்ததால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளதாகவும், நடுத்தெருவில் நிற்கதியாக நிற்பதாகவும் மக்கள் கண்ணீர் விட்டனர்.