Also Watch
Read this
By: Manigandan Raja

ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயற்சி :
கேரளாவில் ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயன்ற திருடனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர் திருச்சி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது தப்பி தலைமறைவான நிலையில், ரயிலில் சிக்கியுள்ளார். இரண்டு ரயில்வே காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.
அமர்நாத் யாத்திரை நாளை கோலாகலமாக தொடக்கம் :

அமர்நாத் யாத்திரை நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். யாத்ரீகர்கள் தங்கும் முகாம்கள், வழித்தடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும் யாத்திரை நடைபெறும் பாதைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் எற்பட்ட வெள்ளப்பெருக்கு - சிக்கியவர்கள் மீட்பு :
கேரளம் மாநிலம் அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.