வீட்டை பார்க்க சென்றபோது விபரீதம் : குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்களது வீட்டின் பால்கனியில் இருந்து தாயும் மகளும் தவறி விழுந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. லிம்பாயத் பகுதியில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக தாயும் மகளும் சென்றனர். அப்போது முதல் தளத்தில் பால்கனி விளிம்பில் எந்த தடுப்பும் அமைக்கப்படாத நிலையில், இருவரும் திடீரென தவறி விழுந்தனர். இதில் காயமின்றி மகள் உயிர்தப்பிய நிலையில், படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Related Link "மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா "