திராவிட மாடல் 2.O ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தமிழக சகோதரிகளுக்கு இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 5 ஆயிரம் ரூபாய் வரவுதமிழ்நாட்டில் 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மூன்றாயிரம் மற்றும் கோடை கால சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பின்வாங்க மாட்டேன்சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையை முடக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். யார் எந்த தடையை ஏற்படுத்தினாலும் பின்வாங்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Related Link சாதிய வன்மத்தில் மினிஸ்டர் மூர்த்தி?