Also Watch
Read this
By: Manigandan Raja

செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் :
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சக நாட்டு வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதிய அவர் முதல் செட்டை கைப்பற்ற, 2-வது செட்டை முசோவா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் லிண்டா வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இறுதிப்போட்டியில் இன்று சின்னர், ஸ்வரேவ் பலப்பரீட்சை :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில், இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் மோதுகின்றனர். இப்போட்டியில், சின்னர் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெறுவாரா அல்லது ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.