Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் கலவரம் :
ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் சுமார் 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஈரானில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து போராட்ட நடத்திய மக்கள் மீது அந்நாட்டு அரசு நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசுதான் காரணம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஈரானை ஒட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானங்களை நிறுத்தியும் பதற்றத்தை உண்டாக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved