Also Watch
Read this
By: Manigandan Raja

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு ரஷ்யா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா நாடுளுக்கு இடையேயான கிட்டத்தட்ட 4 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, அமெரிக்கா தலைமையிலான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த வார இறுதியில் அபுதாபியில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளில் சில புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளுக்கு இடையே ஆழமான வேறுபாடுகள் நீடிக்கின்றன.