Also Watch
Read this
By: Manigandan Raja

ஒடீசா, சுமி நகர், ஸபோரிசியா பகுதியில் தாக்குதல்
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் டிரோன்கள் மற்றும் ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஒடீசா((Odesa))துறைமுகம், சுமி நகர்((Sumy)) மற்றும் ஸபோரிசியா ((Zaporizhzhia)) ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ராஜினாமா

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ்((Mykhailo Fedorov)) தனது ராஜினாமாவை அறிவித்தார். போரின்போது டிரோன்களின் பயன்பாடு முக்கியம் என்பதை மைக்கலோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் யூலியா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஒரே நாளில் மைக்கலோ ஃபெடோரோவ்-ம் தனது ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களின் போராட்டங்களை ஒடுக்க 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் படை குவிக்கப்பட்டு, ஊடகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள், விலைவாசி உயர்வு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. செவ்வாய்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் 12 பேர் உயிரிழந்தனர்.