Also Watch
Read this
By: Manigandan Raja

உக்ரைன் - ரஷ்யா போர் :
ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்சின் 'டிவி' ஒன்றுக்கு போர் தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில், ரஷ்யா உடனான போரில் பெருமளவிலான வீரர்கள் காணாமல் போயுள்ளதாக கூறினார்.