Also Watch
Read this
By: Web Team

இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை வாங்கி உக்ரைன் மீதான போருக்கு உதவி செய்வதாக கூறி டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், உக்ரைன் மீதான போரை எளிதில் நிறுத்திவிடலாம் என்றும் ஆனால் இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவுக்கு உதவி செய்து போரை நிறுத்தவிடாமல் செய்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாமல் உள்ளதற்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.தான் இதுவரை 7 போர்களை நிறுத்தியாக மீண்டும் பெருமிதம் தெரிவித்த டிரம்ப், உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை என்று கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved