ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ரத்ன குமார், பின் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். Related Link காணாமல் போன 7 வயது சிறுமி