Also Watch
Read this
By: Manigandan Raja

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை பாலிவுட் நடிகர் ரன்விர் சிங் ஜாலியாக நடித்து காட்டியது சர்ச்சையான நிலையில், அவர் மீது தற்போது காவல்நிலையத்தில் புகாரளிக்கபட்டுள்ளது.
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வக்கீல் பிரசாந்த் மதல் என்பவர் அளித்த புகாரில், நடிகர் ரன்வீர் சிங் பேச்சு, நடவடிக்கை லட்சக்கணக்கான இந்துகள் மற்றும் கர்நாடகத்தில் துளுமொழி பேசும் மக்களின் மனதை புண்படுத்தி உள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.