Also Watch
Read this
By: Manigandan Raja

உலா வந்த முகமூடி கொள்ளையர்கள் :
பரமக்குடியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் வீடுகளின் கதவுகளை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.பரமக்குடி பெருமாள் கோவில் தெருவில் முகமூடி அணிந்தபடியும், ஹெல்மெட் அணிந்தபடியும் மூன்று கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ஒவ்வொரு வீடாக சென்று டார்ச் லைட் அடித்து நோட்டமிடுகின்றனர்.
அதேபோல் முகமூடி கொள்ளையர்கள் பூட்டி இருக்கும் வீடுகளில் இரும்பு கம்பிகளை கொண்டு பூட்டை உடைத்து வீட்டிற்க்குள் சென்று திருடுகின்றனர். இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் உலாவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதற்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved