வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்ட அந்த குடிநீர் உப்பு நீர் கலந்து வருவதால் கிராம மக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில். சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய புதிதாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் புதிய கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது பணிகள் முழு அளவில் நடைபெற்று வந்த நிலையில் கிணறு அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது என கூறி வனத்துறை அதிகாரிகள் பணியை நிறுத்தி உள்ளனர் இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டனர். Related Link வேற லெவல் சாதனை!!!