news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோழி வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்
tv

Also Watch

tv

Read this

கோழி வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்

உசிலம்பட்டி, மதுரை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முருகம்மாள், இவரது வீட்டின் அருகிலேயே உள்ள இராஜலிங்கம் என்பவரும் நாட்டுக் கோழிகளை வளர்ப்பதாக கூறப்படுகிறது.

கோழி வளர்ப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இன்று முருகம்மாள் குடும்பத்தினரை ராஜலிங்கம் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில் முருகம்மாள், அவரது மகன் சக்தி மற்றும் பொன்னழகு என்ற மூவர் காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் முருகம்மாள் அளித்த புகாரின் பேரில் செக்காணூரணி போலீசார் ராஜலிங்கம் அவரது மனைவி தாரணி, மகன் ரகு மற்றும் விருமாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜலிங்கம், ரகு, விருமாண்டி என்ற மூவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழி வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில், தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
போதை காளான் பயன்படுத்தியதாக நால்வர் கைது

போதை காளான் பயன்படுத்தியதாக நால்வர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென நில அளவை ஒரத்தூர் மேட்டு காலனி மக்கள் அச்சம்

0
5 mins agoshare
ஒரத்தூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau