டெல்லி அதிர்ச்சியூட்டும் தகவல் : தலைநகர் டெல்லியில் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் 15 வரை, மொத்தம் 807 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆய்வாளர் அஜய் ஜா, சில நேரங்களில் மாயமான குழந்தைகள் தாங்களாகவே திரும்பி வந்துவிடுகிறார்கள் என கூறினார். சில நேரங்களில், காணாமல் போனது ஒரு பெண்ணாக இருந்தால், பெற்றோர்கள் சமூகத்தில் தங்கள் நற்பெயருக்குப் பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதில்லை என தெரிவித்தார். Related Link சிக்கிமில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்