இருதரப்பு பேச்சுவார்த்தை : வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக வாஷிங்டனில் இன்று நடைபெற இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அறிவித்த டிரம்ப், உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்குள் அதை நடைமுறைபடுத்துவேன் எனவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Related Link புதுச்சேரி பாஜக மகளிர் அணி அராஜகம்