கொரிய கலாச்சாரம் : உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொரிய கலாச்சாரத்துக்கு அடிமையானதை பெற்றோர் கண்டித்ததால், 3 இளம் சகோதரிகள் குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதன் அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளியாகியுள்ளது. அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "தாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, தங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் போன்களைப் பறித்து தங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர். Related Link எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு