news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews தனியார் மயமாகும் தூய்மை பணி ? - அதிர்ச்சியில் ஊழியர்கள்
tv

Also Watch

tv

Read this

தனியார் மயமாகும் தூய்மை பணி ? - அதிர்ச்சியில் ஊழியர்கள்

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sanitary workers

தூய்மை பணியை தனியார் மையம் ஆகினால் இத்தனை நாட்கள் பணி செய்த தங்களுடைய நிலைதான் என்ன ? என தூய்மைப்பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட மனக்குமுறலில், “ நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் ஏராளமானோர் பணி செய்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனமாக இருக்கக்கூடிய அவர்லாந்து நிறுவனத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஊதியம் குறித்த நேரத்தில் வருவதில்லை. 15ஆம் தேதிக்கு மேல தான் வருகிறது. முதலில் காலை 6 மணி முதல் 2 மணி வரை பணி நேரம் என்று சொன்னவர்கள் தற்போது பிற்பகல் 3 மணி வரை பணி செய்ய சொல்கிறார்கள்.

குப்பை கழிவுகளை எடுத்துக்கொண்டு அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் பகுதிக்கு கொண்டு சென்றால் அங்கே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கக் கூடிய ஒரு நிலை உள்ளது. இந்த நிலையில் தூய்மை பணியை தனியார் மையமாகினால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தூய்மை பணியை தனியார் மயமானால் எங்களைப் போன்ற ஒப்பந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும், இந்த நிலை வராமல் இருக்க தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Link
அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்

அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

16 அடி நீளம் கொண்ட இரு பெட்டிகள் தடம் புரண்டன

0
5 mins agoshare
ஜெர்மனி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved