Also Watch
Read this

ஈரானில் இசைக்கச்சேரி நடந்த்திய பாடகிக்கு 74 கசையடிகள் வழங்க உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.
ஈரானில் பிரபல பாடகி பரஸ்தூ அகமதி தனது யூடியூப் சேனல் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற தேசிய பாடலை பாடினார். ஹிஜப இல்லாமல் 4 ஆண்களுடன் பாடகி பாடிய வீடியோ யூடியூபில் வெளியாகி பார்வையாளர்களையும் கவர்ந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாடகி ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜாப் அணியாமல் பொதுவெளியில் பாடியதாக அந்த பாடகி மீது குற்றம்சாட்டிய அதிகாரிகள் வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரானின் கோம் மாகாணத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாடகியை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர். இதனால், பாடகி பரஸ்தூ அகமதி மற்றும் அவரது இசை குழுவை சேர்ந்த 8 பேருக்கும் தலா 74 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவிதமான கலை சார்ந்த இசை நிகழ்ச்சிகளிலும் பாடகி பங்கேற்கவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடகி மீதான ஈரானின் இந்த அடக்குமுறையும், கசையடி தண்டனையும் மனித உரிமை மீறலாகும் என்ற கருத்தை எடுத்து வைத்துள்ளன. மனித உரிமை மீறல் அமைப்புகள் ஈரானின் செயலுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்ததுடன், ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணுக்கு 74 கசையடிகல் கொடுக்கும் தண்டனை கொடூரமானது என ஆதங்கத்தை வெளிப்படுதியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved