Also Watch
Read this
By: Manigandan Raja

வெவ்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதலில் 9 பேர் பலி :
உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். டினிப்ரோ ((Dnipro)) நகரத்தில் மினி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியான நிலையில், தெற்கு ஜபோரிஷியா ((Zaporizhzhia)) நடந்த ட்ரோன் தாக்குதலில் மூவர் பலியாகினர். அதே பகுதியில் வேன் மீது குண்டுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அப்பாவி மக்கள் தங்கியிருக்கும் கூடாரம் மீது இஸ்ரேல் தாக்குதல் :

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் மக்கள் குடியிருக்கும் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.
பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக அவர் வசிக்கும் கூடாரத்திற்கு 8 வயது சிறுவன் சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறுவனின் தாய் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.